திருப்பூர் : நீட் தேர்வெழுதிய மாணவரின் தந்தை மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : நீட் தேர்வெழுதிய மாணவரின் தந்தை மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் புதிதாக அமையவுள்ள பாலத்தின் பூமி பூஜையில் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, நீட் தேர்வுக்கு கேரளா சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, "அந்த மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்." என்றார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்து, இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தனக்கு அந்த சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது என்று கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் புதிதாக அமையவுள்ள பாலத்தின் பூமி பூஜையில் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, நீட் தேர்வுக்கு கேரளா சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, "அந்த மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்." என்றார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்து, இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தனக்கு அந்த சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது என்று கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.