கோவை : பருவநிலை காரணமாக ஏற்படும் பழுதினால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டதே தவிர, 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இன்று வரை மின்வெட்டு அறவே இல்லை என மின்வாரிய தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோவை : பருவநிலை காரணமாக ஏற்படும் பழுதினால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டதே தவிர, 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இன்று வரை மின்வெட்டு அறவே இல்லை என மின்வாரிய தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம் ஆகிய மேற்கு தொடர்ச்சி பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி, மதுரையிலும் கடந்த சில நாட்களாக பரவலாகக் கோடை மழை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது. பலத்த காற்றினால் ஆங்காங்கே மரங்கள் மின் பகிர்மான கட்டமைப்பின் மீது வீழ்ந்ததன் காரணமாக மின் கம்பிகள் அறுந்தும் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததனாலும் மின்தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக, கடந்த ஏப்., 30-ம் தேதி முதல் கோவை மண்டலத்திலுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 416 எண்ணம் மின்பாதைகளுக்கும், 19 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ஈரோடு மண்டலத்திலுள்ள ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் 173 எண்ணம் மின்பாதைகளுக்கும், 6 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 எண்ணம் மின்பாதைகளுக்கும், 21 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்திலும் 21 எண்ணம் மின்பாதைகளுக்கும், 15 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. சுமார் 865 மின்கம்பங்கள், 61 மின்மாற்றிகள் சேதமடைந்தன.
பலத்த காற்று மழையினால் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆகியவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு, மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பருவநிலை காரணமாக மின்சாதனங்களில் ஏற்படும் பழுதினால், ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தவிர மின்வெட்டு என்பது தமிழகத்தில் கடந்த 05.06.2015 முதல் அறவே இல்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மின்வாரிய தலைமை அலுவலக செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம் ஆகிய மேற்கு தொடர்ச்சி பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி, மதுரையிலும் கடந்த சில நாட்களாக பரவலாகக் கோடை மழை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது. பலத்த காற்றினால் ஆங்காங்கே மரங்கள் மின் பகிர்மான கட்டமைப்பின் மீது வீழ்ந்ததன் காரணமாக மின் கம்பிகள் அறுந்தும் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததனாலும் மின்தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக, கடந்த ஏப்., 30-ம் தேதி முதல் கோவை மண்டலத்திலுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 416 எண்ணம் மின்பாதைகளுக்கும், 19 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ஈரோடு மண்டலத்திலுள்ள ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் 173 எண்ணம் மின்பாதைகளுக்கும், 6 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 எண்ணம் மின்பாதைகளுக்கும், 21 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்திலும் 21 எண்ணம் மின்பாதைகளுக்கும், 15 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. சுமார் 865 மின்கம்பங்கள், 61 மின்மாற்றிகள் சேதமடைந்தன.
பலத்த காற்று மழையினால் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆகியவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு, மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பருவநிலை காரணமாக மின்சாதனங்களில் ஏற்படும் பழுதினால், ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தவிர மின்வெட்டு என்பது தமிழகத்தில் கடந்த 05.06.2015 முதல் அறவே இல்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மின்வாரிய தலைமை அலுவலக செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.