கோடை மழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு உத்தரவு

கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கோவை நகரில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள பிரதான குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும், மழைக்கு நடுவே சூறாவளிக்காற்று வீசுவதால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைகின்றன. ட்ரான்ஸ்ஃபாமர்கள் வெடித்து சிதறுகின்றன. இதனால், இரவு நேரங்களில் பல மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நகரின் முக்கியமான சாலைகளில் மரங்கள் வேரோடு முறிந்து வாகனங்கள் மீது விழுகின்றன. இதுமட்டுமில்லாமல், முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும், ரயில்வே பாலங்களின் கீழ் பகுதியிலும், மழைநீர் தேங்கிக் கொள்வதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களின் உதவியோடு அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, ஆபத்து காலங்களில் உதவும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தயாராக இருக்குமாறு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...