புரோ கபடி விதிமுறைகளின் அடிப்படையில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் தொடக்கம்

தமிழகத்திலேயே முதல் முறையாக புரோ கபடி விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் திருப்பூரில் தொடங்கியது.

தமிழகத்திலேயே முதல் முறையாக புரோ கபடி விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் திருப்பூரில் தொடங்கியது. 



தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டிகள் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதாகும். தற்போது, கபடி விளையாட்டில் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி புரோ கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, உள்விளையாட்டு அரங்கில் ரப்பர் மேட் அமைத்து, அதில் வீரர்கள் விளையாடவேண்டும். மேலும், வீரர்கள் காலில் ஸ்போர்ட்ஸ் காலணி அணிந்து விளையாடவேண்டும் என்பது போன்ற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பூரில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் கபடி போட்டிகள் தனியார் திருமண மண்டப உள்அரங்கில் இன்று தொடங்கியது. புரோ கபடி விதிமுறையின்படி முதன் முறையாக தமிழகத்திலேயே திருப்பூரில் நடத்தப்பட்ட இப்போட்டிகளை மாநகர காவல் ஆணையர் நாகராஜ் தொடங்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 50 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கலந்துகொண்டன. நாளை மாலை வரை நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...