தமிழகத்திலேயே முதல் முறையாக புரோ கபடி விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் திருப்பூரில் தொடங்கியது.
தமிழகத்திலேயே முதல் முறையாக புரோ கபடி விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் திருப்பூரில் தொடங்கியது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டிகள் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதாகும். தற்போது, கபடி விளையாட்டில் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி புரோ கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, உள்விளையாட்டு அரங்கில் ரப்பர் மேட் அமைத்து, அதில் வீரர்கள் விளையாடவேண்டும். மேலும், வீரர்கள் காலில் ஸ்போர்ட்ஸ் காலணி அணிந்து விளையாடவேண்டும் என்பது போன்ற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருப்பூரில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் கபடி போட்டிகள் தனியார் திருமண மண்டப உள்அரங்கில் இன்று தொடங்கியது. புரோ கபடி விதிமுறையின்படி முதன் முறையாக தமிழகத்திலேயே திருப்பூரில் நடத்தப்பட்ட இப்போட்டிகளை மாநகர காவல் ஆணையர் நாகராஜ் தொடங்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 50 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கலந்துகொண்டன. நாளை மாலை வரை நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டிகள் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதாகும். தற்போது, கபடி விளையாட்டில் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி புரோ கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, உள்விளையாட்டு அரங்கில் ரப்பர் மேட் அமைத்து, அதில் வீரர்கள் விளையாடவேண்டும். மேலும், வீரர்கள் காலில் ஸ்போர்ட்ஸ் காலணி அணிந்து விளையாடவேண்டும் என்பது போன்ற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருப்பூரில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் கபடி போட்டிகள் தனியார் திருமண மண்டப உள்அரங்கில் இன்று தொடங்கியது. புரோ கபடி விதிமுறையின்படி முதன் முறையாக தமிழகத்திலேயே திருப்பூரில் நடத்தப்பட்ட இப்போட்டிகளை மாநகர காவல் ஆணையர் நாகராஜ் தொடங்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 50 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கலந்துகொண்டன. நாளை மாலை வரை நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.