கோவை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை - மகன் பலி

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சின்னியம்பாளையம் அடுத்து நீலாம்பூர் பகுதியில் வசித்து வருபவர் திரிலோக சுந்தர். வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர், இன்று காலை 6.30 மணியளவில் சூலூர் குரும்பம்பாளையம் பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தூக்கக் கலக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் ஓட்டி வந்த கார் வேகமாக மோதியது. 

இதில், காரை ஓட்டி வந்த திரிலோக சுந்தர் (42), அவரது மகன் டேனியல் (7) சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காரில் பயணம் செய்த அவரது மனைவி எழிலரசி மற்றும் அவரது மகள் ஷிவானி (9) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...