கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சின்னியம்பாளையம் அடுத்து நீலாம்பூர் பகுதியில் வசித்து வருபவர் திரிலோக சுந்தர். வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர், இன்று காலை 6.30 மணியளவில் சூலூர் குரும்பம்பாளையம் பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தூக்கக் கலக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் ஓட்டி வந்த கார் வேகமாக மோதியது.
இதில், காரை ஓட்டி வந்த திரிலோக சுந்தர் (42), அவரது மகன் டேனியல் (7) சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காரில் பயணம் செய்த அவரது மனைவி எழிலரசி மற்றும் அவரது மகள் ஷிவானி (9) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சின்னியம்பாளையம் அடுத்து நீலாம்பூர் பகுதியில் வசித்து வருபவர் திரிலோக சுந்தர். வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர், இன்று காலை 6.30 மணியளவில் சூலூர் குரும்பம்பாளையம் பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தூக்கக் கலக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் ஓட்டி வந்த கார் வேகமாக மோதியது.
இதில், காரை ஓட்டி வந்த திரிலோக சுந்தர் (42), அவரது மகன் டேனியல் (7) சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காரில் பயணம் செய்த அவரது மனைவி எழிலரசி மற்றும் அவரது மகள் ஷிவானி (9) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.