பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களை மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இன்று காலை 40 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் வைத்து வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர் தியாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அரசு விதிமுறைகளின்படி, பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா..?, பேருந்தில் உள்ள அவசரகால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளனவா..?, வாகனங்களின் பிரேக், கியர் மற்றும் டயர்கள் நல்ல நிலையில் உள்ளதா..? போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், சந்தேகத்திற்குரிய பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தியாகராஜன், தானே பேருந்தினை ஓட்டி அவற்றின் தரம் குறித்து சோதனை செய்தார்.

மேலும், ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி, பள்ளி வாகனங்களை இயக்குவது, அதிவேகமாகப் பேருந்துகளை இயக்குவது, பள்ளி குழந்தைகள் வாகனங்களை விட்டு இறங்கும் முன்பாக வண்டியை நகர்த்துவது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த விதிகளை மீறுவோரின் வாகன உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நாற்பது வயதைக் கடந்த ஓட்டுனர்கள் உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...