நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நைட் பஜார் கடைகளால் நிரந்தர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வியாபாரிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நைட் பஜார் கடைகளால் நிரந்தர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வியாபாரிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி முதல் கோடை சீசன் முடியும் வரை முதல் முறையாக அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் நைட் பஜார் கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், தாவரவியல் பூங்கா அருகே நிரந்தரமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் தாங்கள், கோடை சீசனை நம்பியே இருப்பதாகவும், தற்போது புதிதாக தொடங்கியுள்ள நைட் பஜார் வியாபாரத்தால் வியாபாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் நிரந்தரமாக கடை அமைத்துள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.