கோவை மாவட்ட வன அதிகாரியை பணியிட மாற்றம் செய்தது ஏன்..? வன ஆக்கிரமிப்பாளர்களின் தலையீடா ..? என வனஆர்வலர்கள் சந்தேகம்

கோவை : கோவை மாவட்ட தலைமை வனபாதுகாவலர் திருநாவுக்கரசு திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு வன அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கோவை : கோவை மாவட்ட தலைமை வனபாதுகாவலர் திருநாவுக்கரசு திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு வன அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரம் கோவை மாவட்டத்தின் தலைமை வனபாதுகாவலராக வி. திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இவர், எஸ். சுப்ரமணியம் என்பவருக்கு பதிலாக வனபாதுகாவலர் பணியில் அமர்த்தப்பட்டார். திருநாவுக்கரசு ஏற்கனவே தமிழ்நாடு வனவியல் அகாடமியின் கூடுதல் இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், அவர், திண்டுக்கல் மாவட்ட தலைமை வனபாதுகாவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இவரது பணி மாறுதலால், காலியான கோவை மாவட்டத்தின் தலைமை வனபாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வனவியல் அகாடமியின் கூடுதல் இயக்குநர் பதவிக்கு, தற்போது மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் தீபக் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இல்லாமல் வன அதிகாரி திருநாவுக்கரசு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

"ஒரு நேர்மையான அதிகாரியை திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது", இவ்வாறு ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகின்றார். 

மேலும், ஓய்வுபெற்ற வனஅதிகாரி கூறுகையில், " திருநாவுக்கரசு மாவட்ட வன அலுவலராக இருக்கும் போதே, வன ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை பணியிட மாற்றம் செய்வதற்கான காரணங்களும் ஏதும் இல்லை. தமிழகத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை சந்தித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மைகள் தெரிந்திருந்தாலும் கருத்து மட்டுமே கூற முடியும். மேலும், தீபக் ஸ்ரீவஸ்தவாவும் நேர்மையான அதிகாரிதான்," என்றார். 

கோவை மாவட்டத்தின் தலைமை வனபாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வனவியல் அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள தீபக் ஸ்ரீவஸ்தவா முதுமலை புலிகள் வனக் காப்பகத்தின் கள இயக்குநராகவும் இருக்கிறார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...