பள்ளி தேர்வுகள் காரணமாக 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைப்பு

கோவை : பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவதால் 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவதால் 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயல்வாகை என்ற தன்னார்வலர் அமைப்புகள் சார்பில் விவசாயிகளால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், கோழி மற்றும் முட்டை போன்ற பொருட்கள் ஒரே இடத்தில் 'நம்ம ஊர் சந்தை' என்ற பெயரில் விற்பனை செய்யும் திட்டம் கோவையின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மாநகராட்சி பள்ளி

அதன்படி, நம்ம ஊர் சந்தை திட்டத்தை கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். இதன் ஒரு பகுதியாக நம்ம ஊர் சந்தை திட்டம் வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. 

இந்த சந்தையில் 20-க்கும் மேற்பட்ட கடை அமைக்கப்பட்டு இருந்தது. குறைந்த விலையில் காய்கறிகள் உள்ளிட்ட பல வகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இந்த சந்தையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். 

இந்த நிலையில், வரும் 13-ம் தேதி வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் 'நம்ம ஊர் சந்தை' நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...