நுரையுடன் பவனி வரும் நொய்யல் : சாய ஆலைகளால் பாழாகும் வாழ்வாதாரம்

திருப்பூர் : மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்வதையறிந்த சாய ஆலை உரிமையாளர்கள் அதில் சாயக்கழிவுகளை வெளியேற்றியதால் நுரை பொங்கப் பாய்ந்து சென்றது.

திருப்பூர் : மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்வதையறிந்த சாய ஆலை உரிமையாளர்கள் அதில் சாயக்கழிவுகளை வெளியேற்றியதால் நுரை பொங்கப் பாய்ந்து சென்றது. 



திருப்பூர் மாவட்டத்தின் ஜீவ நதியாக விளங்கி வந்த நொய்யல் ஆறு தற்போது சாக்கடை கழிவுகள் செல்லும் பெரிய கால்வாயாக மட்டுமே உள்ளது. இந்த நதியில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. மற்ற நேரங்களில் வற்றிய நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக, சாய ஆலை அதிபர்களால் இந்ந நதி மூலம், சாயக் கழிவுகளை வெளியேற்ற முடியாத சூழல் இருந்து வந்தது.

 

பொதுவாக 'ஜிரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் முறையில் சாய கழிவு நிரை சுத்திகரித்தால், அந்த தொழிலதிபர்களின் லாபம் குறையும். அதனால், மழை நேரங்களில் நொய்யல் நதியில் செல்லும் நீரில் சாய ஆலைக் கழிவுகளை வெளியேற்றி நிம்மதி கொள்கின்றனர்.

சாய ஆலைக் கழிவுகளை வெளியேற்றக் கூடாது என நீதி மன்றங்கள் தீர்ப்பளித்தும் தொடர்ந்து சாய ஆலைகள் வெளியேற்றும் சாயக் கழிவுகளால் இந்த நதியில் செல்லும் நீரை நம்பியிருந்த சில விவசாயிகளும் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி விட்டனர். தொடர்ந்து சாய கழிவுகளை நொய்யல் நதியில் விட்டதால், நொய்யலை நம்பி இருக்கும் ஓரத்துப்பாளையம் அணை, மக்கள் பயன்படுத்த முடியாத நஞ்சு மிகுந்த கழிவுகள் கொண்ட அணையாக மாறியுள்ளது. மேலும், இந்த அணையைச் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களும் மலட்டுத் தன்மை அடைந்துள்ளது.



மனிதர்கள் பேணிக்காக்க வேண்டிய வளங்களில் மிக முக்கியமானது நீர் வளம். அதனைத் தூய்மையாக வைத்திருக்கவும், பேணிக்காக்கவும் பொதுமக்கள் மட்டும் முயன்றால் போதாது, மாசு ஏற்படுத்தும் ஆலைகளும் அதனைக் கண்காணிக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தம் பணியை உணராமல் இந்த சீர்கேடு என்றும் மாறாது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...