கோவையில் ஒரு நாளில் 6 செ.மீ மழை பதிவு

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

கோவையில் கடந்த நான்கு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் இந்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மழையின் போது நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியும் அடைந்தனர். 

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழை 6 செ.மீ-ஆக பதிவாகியுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டும் 2 முதல் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பகுதிகளில் கோவைக்கு முன்னதாகவே இந்த மழை தொடங்கியது. திருப்பூரில் அதிகபட்சமாக 12 செ.மீ வரை மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

கொங்கு மண்டலத்தில் இன்னும் சற்று நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...