சின்ன வெங்காயத்தின் விலை நிலையாக இருக்கும்

கோவை : சின்ன வெங்காயத்தின் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால், சின்ன வெங்காயத்தின் விலை நிலையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கோவை : சின்ன வெங்காயத்தின் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால், சின்ன வெங்காயத்தின் விலை நிலையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம்; ஆகியவை சின்ன வெங்காயம் விளைவிக்கும் முக்கிய மாநிலங்களாகும்.

தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகின்றது. கோ1, கோ2 மற்றும் கோ5 ஆகிய இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால் உள்நாட்டு தேவைக்கேற்ப கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்து சின்ன வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. 

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு தமிழகம் சின்ன வெங்காயம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வர்த்தக ஆதாரங்களின் படி தற்போதைய பருவத்தில் சின்ன வெங்காயத்திற்கான ஏற்றுமதி தேவை குறைவாக உள்ளது. 

இந்தியாவில் சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராக தமிழ்நாடு உள்ளது. தற்போது தாராபுரம், பல்லடம் மற்றும் உடுமலைபேட்டை ஆகிய இடங்களிருந்து வரத்து திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைளுக்கு வருகிறது. மைசூரிலிருந்து சின்ன வெங்காய வரத்து சந்தைக்கு, ஜுன் மாதத்திலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் அறுவடை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் - விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 15 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின் போது தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 25 இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

மைசூரிலிருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்தைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...