மேட்டுப்பாளையத்தில் பெய்த கன மழையால் தென்னை, வாழை மரங்கள் சேதம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்து சேதமடைந்தன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்து சேதமடைந்தன. 

மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தினசரி மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், நேற்றிரவு பத்து மணிக்கு மேல் வழக்கம் போல் மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது. 

சற்று நேரத்தில் மழையின் அளவு குறைந்த போதிலும் காற்றின் வேகம் அதிகரித்தது. இடி மின்னலுடன் சூறாவளி போல் வீசிய காற்றின் வேகத்தில் சிக்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள கெம்மாரம்பாளையம், கண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதோடு நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சரிந்து மண்ணில் விழுந்தன. 

மேலும், தோட்டங்களில் இருந்த மாமரங்கள், பப்பாளி மரங்கள், சோளப்பயிர்கள் என அனைத்தும் சாய்ந்தன. தோட்டத்து வீடுகளில் இருந்த கூரைகள் பீய்ந்து ஓடுகள் காற்றில் பறந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்களும், ஏழாண்டுகளுக்கும் மேல் வளர்ந்து காய் பிடிக்கும் பக்குவத்திற்கு வந்த உயரமான தென்னை மரங்களும் மண்ணில் கிடப்பதை இன்று காலை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தள்ளனர். 

இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த தங்களது விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே இனி விவசாயத்தை தொடர இயலும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...