கோவை : மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்து சேதமடைந்தன.
கோவை : மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்து சேதமடைந்தன.
மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தினசரி மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு பத்து மணிக்கு மேல் வழக்கம் போல் மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது.
சற்று நேரத்தில் மழையின் அளவு குறைந்த போதிலும் காற்றின் வேகம் அதிகரித்தது. இடி மின்னலுடன் சூறாவளி போல் வீசிய காற்றின் வேகத்தில் சிக்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள கெம்மாரம்பாளையம், கண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதோடு நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சரிந்து மண்ணில் விழுந்தன.
மேலும், தோட்டங்களில் இருந்த மாமரங்கள், பப்பாளி மரங்கள், சோளப்பயிர்கள் என அனைத்தும் சாய்ந்தன. தோட்டத்து வீடுகளில் இருந்த கூரைகள் பீய்ந்து ஓடுகள் காற்றில் பறந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்களும், ஏழாண்டுகளுக்கும் மேல் வளர்ந்து காய் பிடிக்கும் பக்குவத்திற்கு வந்த உயரமான தென்னை மரங்களும் மண்ணில் கிடப்பதை இன்று காலை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தள்ளனர்.
இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த தங்களது விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே இனி விவசாயத்தை தொடர இயலும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தினசரி மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு பத்து மணிக்கு மேல் வழக்கம் போல் மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது.
சற்று நேரத்தில் மழையின் அளவு குறைந்த போதிலும் காற்றின் வேகம் அதிகரித்தது. இடி மின்னலுடன் சூறாவளி போல் வீசிய காற்றின் வேகத்தில் சிக்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள கெம்மாரம்பாளையம், கண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதோடு நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சரிந்து மண்ணில் விழுந்தன.
மேலும், தோட்டங்களில் இருந்த மாமரங்கள், பப்பாளி மரங்கள், சோளப்பயிர்கள் என அனைத்தும் சாய்ந்தன. தோட்டத்து வீடுகளில் இருந்த கூரைகள் பீய்ந்து ஓடுகள் காற்றில் பறந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்களும், ஏழாண்டுகளுக்கும் மேல் வளர்ந்து காய் பிடிக்கும் பக்குவத்திற்கு வந்த உயரமான தென்னை மரங்களும் மண்ணில் கிடப்பதை இன்று காலை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தள்ளனர்.
இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த தங்களது விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே இனி விவசாயத்தை தொடர இயலும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.