கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.
கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.

ஆர்க் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து 'மேரகி' என்ற நடனப் பள்ளியை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பள்ளியை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது, ராம்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடனப்பள்ளி, சிறிது நாட்களுக்கு பிறகு, எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 40 வகையிலான பாடல்கள், மொழி நடனம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து கொள்ளலாம். பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கோடை வகுப்பாக ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பின்னர், ஜுன் மாதத்தில் தினசரி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.


ஆர்க் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து 'மேரகி' என்ற நடனப் பள்ளியை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பள்ளியை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது, ராம்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடனப்பள்ளி, சிறிது நாட்களுக்கு பிறகு, எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 40 வகையிலான பாடல்கள், மொழி நடனம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து கொள்ளலாம். பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கோடை வகுப்பாக ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பின்னர், ஜுன் மாதத்தில் தினசரி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
