கூடலூரில் யானை தாக்கி இளைஞர் பலி: பாதுகாப்பு வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கருக்கபாளி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (29). நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வேண்டும், கிராமத்தைச் சுற்றி அகழி வெட்ட வேண்டும், சோலார் மின்வேலி அமைத்து காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை அப்பகுதி மக்கள் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் உள்ள பாடந்துறை பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் காட்டு யானைகளிடம் இருந்து அப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக தமிழகம் - கேரளா இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...