இந்த மே மாதத்திற்குள் தமிழகத்திற்கு உடனடியாக 4 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், தவறினால், கர்நாடகா அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த மே மாதத்திற்குள் தமிழகத்திற்கு உடனடியாக 4 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், தவறினால், கர்நாடகா அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காவிரி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4 டி.எம்.சி., தண்ணீரைக் காவிரியில் திறந்துவிட வேண்டும். உத்தரவை மீறினால் மாநில அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும். காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம்.
அதுபற்றி கவலையில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்தி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.