அடுத்தடுத்த இருநாட்களில் 3 கைதிகள் உயிரிழப்பு: கோவை மத்திய சிறையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளில், கடந்த இருநாட்களில் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளில், கடந்த இருநாட்களில் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா வழக்கு ஒன்றில் கைதாகி சொக்கநாதன் என்பவர் கடந்த 16-ம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று, வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சொக்கநாதன் உயிரிழந்தார். அதேபோல, பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி, கோவை மத்திய சிறையில் இருந்த மற்றொரு கைதியான சீனிவாசன், திடீரென சிறையில் இருந்த மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.



இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதியான உதயகுமார் என்பவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று முன்தினம் சிறையில் இருந்த இரு கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தற்போது, மேலும் ஒரு கைதி இறந்திருப்பது அனைவரிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர் சிறை மரணங்களால், கோவை மாவட்ட சிறைச்சாலையின் மருத்துவ சிகிச்சை முறை பற்றியும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தத் தொடர் மரணங்களால் கோவை மத்திய சிறையில் மருத்துவ வசதிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...