கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
புலியகுளம் ரெட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா ராஜசேகர். இவர் கொடுத்த மோசடி மற்றும் பாலியல் புகாரின் பேரில், இராமநாதபுரம் போலீசார் தி.மு.க., மாணவர் அணியின் கோவை மாவட்ட இணை அமைப்பாளர் ஆறுமுக பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தி.மு.க.,வின் தலைமை கழக ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா அறிவாலயத்திலிருந்து தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது :- கோவை மாநகர வடக்கு மாவட்ட மாணவர் அணியின் இணை அமைப்பாளர் வி. ஆறுமுகப் பாண்டியன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 'தற்காலிகமாக நீக்கி' வைக்கப்படுகிறார், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலியகுளம் ரெட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா ராஜசேகர். இவர் கொடுத்த மோசடி மற்றும் பாலியல் புகாரின் பேரில், இராமநாதபுரம் போலீசார் தி.மு.க., மாணவர் அணியின் கோவை மாவட்ட இணை அமைப்பாளர் ஆறுமுக பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தி.மு.க.,வின் தலைமை கழக ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா அறிவாலயத்திலிருந்து தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது :- கோவை மாநகர வடக்கு மாவட்ட மாணவர் அணியின் இணை அமைப்பாளர் வி. ஆறுமுகப் பாண்டியன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 'தற்காலிகமாக நீக்கி' வைக்கப்படுகிறார், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
