கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது.

வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறையினர் பயிற்சி மையத்தில் கொடைக்கானல், மேகமலை, ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்ட வனத்துறையினருக்கு 2018-ம் ஆண்டுக்கான வன உயிரின கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் தமிழக முதன்மை வன பாதுகாவலர் கணேசன் மற்றும் மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து ஆகியோர் தலைமையேற்றனர். டாப்சிலிப் வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி, ஓய்வுபெற்ற வன அலுவலர் தங்கராஜ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.