திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவை அடித்து உடைக்கப்பட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவை அடித்து உடைக்கப்பட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பல்லடம் பேருந்து நிலையம் அருகே தொடக்க வேளாண்மை உழவர் பணிக்கூட்டுறவு சங்கம் உள்ளது. இச்சங்கத்திற்கான தேர்தல் மற்றும் வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதியன்று தேர்தல் அலுவலர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஆளும் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தி.மு.க., அ.தி.மு.க. ,உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு பெருமளவு திரண்டிருந்தனர்.

தேர்தல் அலுவலர் கண்ணன் மனுக்களைப் பரிசீலனை செய்து கொண்டிருந்த போது, வங்கியில் புகுந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று தேர்தல் அலுவலரிடம் இருந்த மனுக்களைப் பிடுங்கி கிழித்து வீசியது. மேலும், அலுவலகத்தில் இருந்த மேசை, நாற்காலிகள், பல்புகளை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து, தேர்தல் அலுவலர் கண்ணன் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இந்தக் கலவரத்தின் காரணமாக தேர்தல் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி அறிவித்தார்.
பல்லடம் பேருந்து நிலையம் அருகே தொடக்க வேளாண்மை உழவர் பணிக்கூட்டுறவு சங்கம் உள்ளது. இச்சங்கத்திற்கான தேர்தல் மற்றும் வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதியன்று தேர்தல் அலுவலர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஆளும் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தி.மு.க., அ.தி.மு.க. ,உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு பெருமளவு திரண்டிருந்தனர்.

தேர்தல் அலுவலர் கண்ணன் மனுக்களைப் பரிசீலனை செய்து கொண்டிருந்த போது, வங்கியில் புகுந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று தேர்தல் அலுவலரிடம் இருந்த மனுக்களைப் பிடுங்கி கிழித்து வீசியது. மேலும், அலுவலகத்தில் இருந்த மேசை, நாற்காலிகள், பல்புகளை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து, தேர்தல் அலுவலர் கண்ணன் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இந்தக் கலவரத்தின் காரணமாக தேர்தல் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி அறிவித்தார்.