பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து உதகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை : பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி : பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளும், இயற்கை சூழல் நிறைந்த மாவட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது அங்கு கோடை சீசன் நிலவி வருவதால், அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. 

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்பளர்கள், தட்டுகள், பைகள் போன்றவற்றை வனப்பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் வீசி விட்டு செல்வதால் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதோடு, அதை உட்கொள்ளும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கி வருவதை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதித்தும், மாவட்ட எல்லைகளில் இதற்க்காக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.



ஆனாலும் சுற்றுலா பயணிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உதகை படகு இல்லத்திற்க்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது. 

இதில் பள்ளி மாணவிகள் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியதோடு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...