திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதலமைச்சர் குறித்த விளம்பரம் நிறுத்தம்

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக செய்தித்துறை சார்பில் அரசு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த விளம்பரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்ததற்கு கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வருகிறார். பூசாரி அந்த பெண்ணுக்கு அர்ச்சனை செய்யும் போது அந்தப் பெண், சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்ல, சாமி பெயருக்கு என்கிறார். இதற்கு பூசாரி..எந்த சாமிக்கு என்று கேட்க..அந்தப் பெண் நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு என்கிறார். திரையரங்கிற்குப் படம் பார்க்க வந்தவர்கள் இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடீயோவிற்கு தற்போது மீம்ஸ்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், இந்த விளம்பரத்தை திரையரங்குகளில் ஒளிபரப்புவதை நிறுத்த தமிழக செய்தித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "முதலமைச்சர் குறித்து திரையரங்குகளில் வெளியான விளம்பரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறப்பட்டு, அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்டது," எனக் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...