சிம் கார்டுகளை வாங்க ஆதார் அட்டையைக் கொடுக்குமாறு, வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிம் கார்டுகளை வாங்க ஆதார் அட்டையைக் கொடுக்குமாறு, வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிம் கார்டுகள் வாங்க ஆதார் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், ஆதார் கார்டு நகல் அளிக்காதவர்களுக்கு சிம் கார்டுகள் மறுக்கப்பட்டதாகக் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி புகார் எழுந்தது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
அதன்படி, மொபைல் போன் சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை வழங்க வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம் கார்டு வழங்கலாம். அதற்கு பதிலாக அடையாள சான்றாக ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பிறகு சான்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்திப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டுகள் வாங்க ஆதார் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், ஆதார் கார்டு நகல் அளிக்காதவர்களுக்கு சிம் கார்டுகள் மறுக்கப்பட்டதாகக் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி புகார் எழுந்தது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
அதன்படி, மொபைல் போன் சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை வழங்க வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம் கார்டு வழங்கலாம். அதற்கு பதிலாக அடையாள சான்றாக ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பிறகு சான்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்திப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.