இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை அகற்றியவர்கள், மொழியை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் : டிடிவி தினகரன்

கோவை : இந்தியா வரைபடத்தில் இருந்து தமிழகத்தையே அகற்றியவர்கள், தமிழ்மொழியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை : இந்தியா வரைபடத்தில் இருந்து தமிழகத்தையே அகற்றியவர்கள், தமிழ்மொழியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது :- சென்னையில் மதுசூதனனுடன் இருக்கும் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்தது போகாத ஊருக்கு அவர் வழி சொல்வது போல இருக்கிறது. திவாகரன் போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. யாருடனும் எனக்கு நெருடல் கிடையாது. சதிகாரர்களின் வலையில் விழுந்தவர்கள் இப்படிப் பேசுகின்றனர். 

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை. பா.ஜ.க., வினருக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி கிடையாது. கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க., செயல்படுகின்றனர். எனவே, நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது, என்றார். 

மேலும், "திவாகரன் மற்றும் தினகரன் விரைவில் காணாமல் போய் விடுவார்கள் என முதலமைச்சர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "முன்னாள் முதலமைச்சர்கள் பலர் காணாமல் போனது போல, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் காணாமல் போய்விடுவார்கள். தமிழகத்தையே இந்தியா வரைபடத்தில் இருந்து எடுத்துவிட்டனர். தமிழ் மொழியையா மத்திய அரசில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளப்போகின்றனர்," எனக் கூறினார். 

இதைத்தொடர்ந்து, ரூ. 20 விவகாரத்தில் ஆர்.கே. நகரில் முற்றுகையிட்ட பெண்கள் மதுசூதனன் ஆட்கள் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தையும் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்ட தினகரன், "இதுபோல நிறைய ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது. மேலும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் நடத்துகின்றனர். சட்டரீதியாக இதைப் போராடி வெல்வோம். திவாகரன் குறித்த எந்த ஒரு கேள்விகளுக்கு பதில் சொல்ல போவதில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல். 18 எம்.எல்.ஏ., வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்," எனத் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...