சேலம் மாவட்ட ஆட்சியர் மீது காலணி வீசிய முதியவர்

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீது ஒருவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீது ஒருவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆர்.பாஜிபக்ரே பொதுமக்களின் குறைகளுக்கான மனுக்களைப் பெற்று வந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த ஒருவர் திடீரென காலில் அணிந்திருந்த காலணியைக் கழற்றி மாவட்ட ஆட்சியர் தலைமீது ஓங்கி வீசினார். இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி சட்டென்று விலகினார். இதனால், அருகில் இருந்தவர் மீது காலணி பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் அவரைப் பிடித்து தாக்கினர். 



சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி, அவரின் கன்னத்தில் அறைந்தார். பிறகு, அவரை அடித்து இழுத்துக்கொண்டு சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு குண்டுக்கட்டாக இழுத்து சென்றார். இதனால், சற்றுநேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அவர் பற்றி விசாரிக்கும்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு காவலர்கள் அவர் உண்மையில் மனநோய் பாதிக்கப்பட்டவரா, இல்லை வேறு ஏதாவது காரணத்துக்காக இப்படி செய்துள்ளாரா என்பது பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதுபற்றி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டதற்கு, ''அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய சொந்த ஊர் ராசிபுரம், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் ஆசீர்வாதம் செய்வதாக காலணியை கழற்றியிருக்கிறார். பிறகு கைது பண்ணி நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்போது நீதிபதிக்கு முத்தம் கொடுக்கப் போயிருக்கிறார். இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...