சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட தி.க.,வினர்

கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரயிலை இயக்கக் கோரியும், கோவையிலிருந்து நெல்லை மற்றும் செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.



இந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்கவே அகலப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அது செயல்படுத்தப்பட்டும், ரயில்களை அதிக அளவு இயக்கப்படுவதில்லை. ரயில்வே துறையால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...