சிட்டுக் குருவிகளை பாதுகாக்க இணைந்த கோவை தன்னார்வலர்கள்

கோவை: சிட்டுக் குருவிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை பாதுகாப்பது மற்றும் அவை பற்றிய ஆய்வு மேற்கொண்டு கூடுகள் அமைத்துக் கொடுக்கவும் 'நமது சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்' என்ற திட்டம் கோவை மாநகராட்சி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: சிட்டுக் குருவிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை பாதுகாப்பது மற்றும் அவை பற்றிய ஆய்வு மேற்கொண்டு கூடுகள் அமைத்துக் கொடுக்கவும் 'நமது சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்' என்ற திட்டம் கோவை மாநகராட்சி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.



சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு அமைப்பு, க்யூப் அமைப்பு, மகிந்த்ரா பம்ப் நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கோவை மாநகராட்சியோடு இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.



"சிட்டுக் குருவிகள் இனம் அழிவை நோக்கிப் பயணிக்க பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று அதன் வாழ்விடம் அழிக்கப்பட்டு வருவதே. வீட்டைச் சுற்றியுள்ள தோட்டங்களில் வெளிநாட்டு செடிகளை வளர்ப்பதால் படர விடப்படும் முல்லை, அவரை போன்ற தாவரங்கள் குறைந்து விட்டன. எனவே அவைகளில் இருந்து வெளியே வரும் புழுக்களை சிட்டுக் குருவிகள் தன் குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்க முடிவதில்லை. மேலும், இப்போது யாரும் வீட்டு முற்றங்களில் தானியங்களை புடைப்பதோ, உணவு பாத்திரங்களை கழுவுவதோ இல்லை. இதனால் குருவிகளுக்கு உணவு கிடைப்பதில்லை. முக்கியமாக, கான்கிரீட் கட்டிடங்கள் குருவிகள் கூடுகட்ட ஏற்றதாக இருப்பதில்லை. இவை அனைத்தையும் சரிசெய்து சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது." என்கிறார் 'க்யூப்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்னி பீட்டர்.



இத்திட்டத்தில், கோவை மாநகரில் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்ற இடங்கள் முதலில் கண்டறியப்பட்டு, அங்கு ஒவ்வொரு மாதமும் சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக அவ்விடங்களில் உள்ள மக்களின் பங்களிப்போடு சிட்டுக் குருவிகளுக்காகவே அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட 3000 குருவிக் கூடுகள் அமைக்கப்படும். அக்கூடுகள் ஆராய்ச்சி மாணவர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு சிட்டுக் குருவிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆண்டுதோறும் இத்திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகள் முறைப்படி வெளியிடப்பட உள்ளது.

முதற்கட்டமாக மாநகராட்சி அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் குருவிக் கூடுகள் பொருத்தி ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.



மேலும், சிட்டுக் குருவிகள் உள்ள இடங்களில் கூடுகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் '99433 20303' என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் இலவசமாக கூடுகள் அமைத்துத் தரப்படும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...