கோவை: கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கவிருக்கும் ரிங் ரோட்டிற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கவிருக்கும் ரிங் ரோட்டிற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று கோவை அன்னூர் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 8 கி.மீ., நீளம், 150 அடியில் அகல வட்ட சாலை அமைக்க கரியாம்பாளையத்தில் இருந்து தாசம்பளையம் வரை அவிநாசி-அன்னூர் சாலையை இணைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் அளவீடு செய்து நெடுஞ்சாலை துறையினர், கல் பதித்து வருகின்றனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட வட்டசாலை திட்டத்தை மாற்றி, தற்போது முன் அறிவிப்பின்றி தங்களது விவசாய நிலங்களில் கல் பதித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தானியம், கரும்பு, தென்னை, மஞ்சள், வாழைகள் பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வட்ட சாலை விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதால், 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். வட்டசாலை அமைந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நண்மை அடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முறையான அளவீடு செய்து விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், இவ்வாறு கூறினர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கும் மனு அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று கோவை அன்னூர் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 8 கி.மீ., நீளம், 150 அடியில் அகல வட்ட சாலை அமைக்க கரியாம்பாளையத்தில் இருந்து தாசம்பளையம் வரை அவிநாசி-அன்னூர் சாலையை இணைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் அளவீடு செய்து நெடுஞ்சாலை துறையினர், கல் பதித்து வருகின்றனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட வட்டசாலை திட்டத்தை மாற்றி, தற்போது முன் அறிவிப்பின்றி தங்களது விவசாய நிலங்களில் கல் பதித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தானியம், கரும்பு, தென்னை, மஞ்சள், வாழைகள் பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வட்ட சாலை விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதால், 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். வட்டசாலை அமைந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நண்மை அடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முறையான அளவீடு செய்து விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், இவ்வாறு கூறினர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கும் மனு அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.