அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ் வழங்குவது இழுத்தடிப்பு: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கோவை: கோவை மாவட்டத்திற்கு அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாவட்டத்திற்கு அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செட்டாப் பாக்ஸ்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக கோவை ஆபரேட்டர்களுக்கு வழங்கவில்லை. இது குறித்து கோவை மற்றும் சென்னை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் முறையான பதில் அளிக்கப்படவில்லை. மேலும், செட்டாப் பாக்ஸ் வாங்க தலா ரூ. 30 வீதம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட 2,50,000 விண்ணப்பங்களுக்கான தொகை ஆபரேட்டர்களால் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனில் செலுத்தப்பட்டது. 

செட்டாப் பாக்ஸ்களுக்கான முழுத்தொகையான ரூ.180 வீதம் அனைத்து செட்டாப் பாக்ஸிற்கான தொகையை செலுத்தியுள்ளோம். இருப்பினும், கோவைக்கு மட்டும் செட்டாப் பாக்ஸ்களை வழங்காமல் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மறுத்து வருகிறது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 'அட்சயா' என்ற பெயரில் பந்தய சாலையில் தனியார் கேபிள் டிவி தொடங்கி, அதன்மூலம் செட்டாப் பாகஸ்கள் விற்க திட்டமிட்டுள்ளார். தனியார் செட்டாப் பாக்ஸ்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு செட்டாப் பாக்ஸுகள் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை, அமைச்சர் தடுக்க நினைப்பது துரோகம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...