திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டுவரும் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.அப்போது, தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் மேயர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, போலீசார் அ.தி.மு.க-வினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தி.மு.க-வினரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் போலீசாரின் தடையை மீறி வங்கி வளாகத்திற்குள் நுழைந்தனர் இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக செயல்பட்ட போலீசாரைக் கண்ணடித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர் இதனிடையே இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு உருவானதை அடுத்து தி.மு.க., கம்யூன்ஸ்ட், உள்ளிட்ட கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேட்பு மனு தேதியை ஒத்திவைத்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டுவரும் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.அப்போது, தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் மேயர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, போலீசார் அ.தி.மு.க-வினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தி.மு.க-வினரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் போலீசாரின் தடையை மீறி வங்கி வளாகத்திற்குள் நுழைந்தனர் இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக செயல்பட்ட போலீசாரைக் கண்ணடித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர் இதனிடையே இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு உருவானதை அடுத்து தி.மு.க., கம்யூன்ஸ்ட், உள்ளிட்ட கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேட்பு மனு தேதியை ஒத்திவைத்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.