அடிதடியில் முடிவடைந்த கூட்டுறவு சங்க தேர்தல்: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டுவரும் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.அப்போது, தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் மேயர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, போலீசார் அ.தி.மு.க-வினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தி.மு.க-வினரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் போலீசாரின் தடையை மீறி வங்கி வளாகத்திற்குள் நுழைந்தனர் இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக செயல்பட்ட போலீசாரைக் கண்ணடித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர் இதனிடையே இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு உருவானதை அடுத்து தி.மு.க., கம்யூன்ஸ்ட், உள்ளிட்ட கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேட்பு மனு தேதியை ஒத்திவைத்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...