கோவை: தீ விபத்தின் போது சிலிண்டர் போன்றவை வெடிக்கக் கூடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி. பிரதிப்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை: தீ விபத்தின் போது சிலிண்டர் போன்றவை வெடிக்கக் கூடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி. பிரதிப்குமார் தெரிவித்துள்ளார்.
செல்பி
செல்பி மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் எங்கும் செல்பி, எதிலும் செல்பி என்ற நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா தளங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அதே போல் சாலை விபத்து, தீ விபத்து ஏற்படும் பகுதிகளிலும் சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்று.
இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பிரதிப்குமார் கூறுகையில், "தீ விபத்தின் போது அதன் அருகில் செல்வதோ அல்லது செல்பி எடுக்க முயல்வதோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிலிண்டர் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் இருந்தால் அது வெடிக்க வாய்ப்புள்ளது. அப்போது வேடிக்கை பார்ப்பவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடியும்." என்றார்.
தீ விபத்தின் போது அதனை அணைக்க முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் தோறும் தீயணைப்பு வீரர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்தும், மக்கள் அந்த சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளிப்பார்கள்.
இது குறித்து பிரதிப்குமார் கூறுகையில், "மாதம் தோறும் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் அல்லது கிராமப்புறங்களில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளார்கள் என்றே கூறலாம். போதுவாக கோடை கலங்களில் தீ விபத்து குறித்து அதிக அழைப்புகள் வரும் ஆனால், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தாண்டு அழைப்புகள் குறைவே. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்." என்றார்.
செல்பி
செல்பி மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் எங்கும் செல்பி, எதிலும் செல்பி என்ற நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா தளங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அதே போல் சாலை விபத்து, தீ விபத்து ஏற்படும் பகுதிகளிலும் சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்று.
இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பிரதிப்குமார் கூறுகையில், "தீ விபத்தின் போது அதன் அருகில் செல்வதோ அல்லது செல்பி எடுக்க முயல்வதோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிலிண்டர் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் இருந்தால் அது வெடிக்க வாய்ப்புள்ளது. அப்போது வேடிக்கை பார்ப்பவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடியும்." என்றார்.
தீ விபத்தின் போது அதனை அணைக்க முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் தோறும் தீயணைப்பு வீரர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்தும், மக்கள் அந்த சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளிப்பார்கள்.
இது குறித்து பிரதிப்குமார் கூறுகையில், "மாதம் தோறும் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் அல்லது கிராமப்புறங்களில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளார்கள் என்றே கூறலாம். போதுவாக கோடை கலங்களில் தீ விபத்து குறித்து அதிக அழைப்புகள் வரும் ஆனால், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தாண்டு அழைப்புகள் குறைவே. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்." என்றார்.