கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
டெல்டா பகுதிகளில் துணை ராணுவ படையினர் வந்துள்ளது பயிற்சிக்காக மட்டுமே தவிற வேறு எதுவும் இல்லை. டி.டி.வி தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோரது இரண்டு கட்சிகளும் நிலைக்காது. விரைவில் காணாமல் போய்விடுவார்கள். சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தெலுங்கானா முதல்வரும் எந்த நிலையில் பேசினார்கள் என்று தெரியாது. தற்போது தான் அதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன்.
அ.தி.மு.க.
பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் உடல்நலக்குறைவு மற்றும் விபத்தின் போது வழங்கப்பட்டு வரும் நிதி எப்போதும் நிறுத்தப்படாது. அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்.
கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் வழக்கம் போல் சின்னம் கிடைத்துவிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.