கோவை: கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை: கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 4 சதவீத அரசு வேலைவாய்ப்பு, இலவச வீடு, கல்வி, உதவித் தொகையை ரு.5000-மாக உயர்த்தி வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அஷோக் ஸ்ரீநிதி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக சென்றனர்.
கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.
காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 4 சதவீத அரசு வேலைவாய்ப்பு, இலவச வீடு, கல்வி, உதவித் தொகையை ரு.5000-மாக உயர்த்தி வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அஷோக் ஸ்ரீநிதி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக சென்றனர்.
கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.