நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

பெங்களூரு அல்ட்ரா மாரத்தான் அகாடமி சார்பில் தேசிய அளவிலான அல்ட்ரா மாரத்தான் ஓட்டம் உதகை ஆனந்தகிரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் 15 கி.மீ, 30 கி.மீ, 60 கி.மீ தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கோவா, அரியானா மற்றும் உத்திரபிரதேசம் உட்பட 10 மாநிலங்களிலிருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கலந்து கொண்டார்.

ஆனந்தகிரி பகுதியிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது கோடப்பமந்து, தேயிலை பூங்கா, கெந்தொரை, கக்குச்சி, இடுஹட்டி, பரலட்டி, தும்மனட்டி, பட்டர்கம்பை என்ற கிராம புற பகுதிகளில் நடை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

பெங்களூரு அல்ட்ரா மாரத்தான் அகாடமி சார்பில் தேசிய அளவிலான அல்ட்ரா மாரத்தான் ஓட்டம் உதகை ஆனந்தகிரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் 15 கி.மீ, 30 கி.மீ, 60 கி.மீ தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கோவா, அரியானா மற்றும் உத்திரபிரதேசம் உட்பட 10 மாநிலங்களிலிருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கலந்து கொண்டார்.

ஆனந்தகிரி பகுதியிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது கோடப்பமந்து, தேயிலை பூங்கா, கெந்தொரை, கக்குச்சி, இடுஹட்டி, பரலட்டி, தும்மனட்டி, பட்டர்கம்பை என்ற கிராம புற பகுதிகளில் நடை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.