நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளின் உடல் எடை பரிசோதனை இன்று நடைபெற்றது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளின் உடல் எடை பரிசோதனை இன்று நடைபெற்றது.
முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்றது. முகாமையொட்டி, வளர்ப்பு யானைகள், யானை சவாரி மற்றும் இதர பணிகளுக்கு ஈடுபடுத்தப்படாமல் 48 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. வளர்ப்பு யானைகளுக்கு புரதச்சத்து மிகுந்த உணவுகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு யானைகளின் உடல் திறனுக்கேற்ப புரதச்சக்தி உள்ள மருந்து பொருட்களும் கொடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த மாதம் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நிறைவு பெற்ற நிலையில், இன்று வளர்ப்பு யானைகளின் உடல் எடை பரிசோதனை, தொரப்பள்ளி எடை பரிசோதனை மையத்தில் நடைபெற்றது. இதில், 14 வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் வளர்ப்பு யானைகளின் உடல் திறன் ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் கிருஷ்ணகிரி மற்றும் வண்டலூர் பூங்காவிலிருந்து வந்த யானைகளும் பங்கேற்றது குறிப்பிடதக்கது.
முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்றது. முகாமையொட்டி, வளர்ப்பு யானைகள், யானை சவாரி மற்றும் இதர பணிகளுக்கு ஈடுபடுத்தப்படாமல் 48 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. வளர்ப்பு யானைகளுக்கு புரதச்சத்து மிகுந்த உணவுகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு யானைகளின் உடல் திறனுக்கேற்ப புரதச்சக்தி உள்ள மருந்து பொருட்களும் கொடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த மாதம் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நிறைவு பெற்ற நிலையில், இன்று வளர்ப்பு யானைகளின் உடல் எடை பரிசோதனை, தொரப்பள்ளி எடை பரிசோதனை மையத்தில் நடைபெற்றது. இதில், 14 வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் வளர்ப்பு யானைகளின் உடல் திறன் ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் கிருஷ்ணகிரி மற்றும் வண்டலூர் பூங்காவிலிருந்து வந்த யானைகளும் பங்கேற்றது குறிப்பிடதக்கது.