பள்ளித் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

கோவை : பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது எனவும், குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


கோவை : பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது எனவும், குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் பொறியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் துவங்க இருக்கும் ஆன்-லைன் கவுன்சிலிங் குறித்த அறிமுக விளக்க நிகழ்ச்சி தனியார் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயாகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிகளவு நிதி வழங்கி இருக்கிறது. அதன்மூலம் நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. மேலும், மே மாதத்தின் இறுதி வாரத்தில் 1,6,9 மற்றும் 11 வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும். சி.பி.எஸ்.சி., பாடத்தை விட சிறப்பாக கல்வி திட்டம் கொண்டு வரப்படும். பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஒருநாள் கூட கால தாமதம் ஏற்படாது. குறிப்பிட்ட தேதியில் இரண்டே மணித்துளிகளில் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். 

மேலும், கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தக்கூடாது. வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும். மீறி வகுப்பு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார். 



இதனைத்தொடர்ந்து, பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், "11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கிலும் நியாய தராசு வரும். பொருத்து இருந்து பார்க்கலாம். திவாகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர்தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க., இயக்கம் ஆலமரம் போன்றது. டிடிவி தினகரன் கட்சியில் அனைவரையும், கட்சியில் இருந்து அவரே வெளியே அனுப்பி விடுவார்," என்றார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...