கோவை : முறைகேடான ஆதாயம் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, தமிழகத்தில் கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை : முறைகேடான ஆதாயம் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, தமிழகத்தில் கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "சீமை சாராய அதிபர்களின் நெருக்கடி காரணமாகவும், முறைகேடான ஆதாயம் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. கள் உணவு, மது, போதை பொருள் எனப் புரிதல் இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு உணவின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கள் இறக்குவதும், குடிப்பதும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. இது உலகளாவிய நடைமுறையும் ஆகும்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான பீகார், கர்நாடகா, கேரள மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் கள் இறக்க அனுமதி மறுப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். வரும் காலங்களில் மென் பானங்கள் மூலமே அதிக வருவாய் ஈட்ட முடியும் என்ற நிலை மாறி வருகிறது. தமிழகத்தில் ஒன்பது நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மதுபான வகைகளை கண்காணித்து கட்டுப்படுத்தி விற்பனை செய்யும் போதும், கள் கலப்படத்தை கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களால் முடியும் போதும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறுவது அரசின் கையில் ஆகாத தனம்.
மேலும், கள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 75,000 மரம் ஏறும் தொழிலாளர்கள், தற்போது அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்றுவிட்டனர். பதனியில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையின் விலை ரூ. 200 ஆக உள்ளது. நீரா பானம் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்யும் போது ரூ. 500 வரை பெற முடியும் என்பதால் விவசாயிகள் பலன் பெறுவர். தமிழகம் முழுவதும் தற்போது விவசாயிகள் கள் இறக்கி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும் போலீசார், பானைகளை உடைப்பது, பொய் வழக்கு போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுவரை 30,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை சட்ட ரீதியாக சந்திப்போம்," எனக் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "சீமை சாராய அதிபர்களின் நெருக்கடி காரணமாகவும், முறைகேடான ஆதாயம் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. கள் உணவு, மது, போதை பொருள் எனப் புரிதல் இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு உணவின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கள் இறக்குவதும், குடிப்பதும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. இது உலகளாவிய நடைமுறையும் ஆகும்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான பீகார், கர்நாடகா, கேரள மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் கள் இறக்க அனுமதி மறுப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். வரும் காலங்களில் மென் பானங்கள் மூலமே அதிக வருவாய் ஈட்ட முடியும் என்ற நிலை மாறி வருகிறது. தமிழகத்தில் ஒன்பது நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மதுபான வகைகளை கண்காணித்து கட்டுப்படுத்தி விற்பனை செய்யும் போதும், கள் கலப்படத்தை கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களால் முடியும் போதும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறுவது அரசின் கையில் ஆகாத தனம்.
மேலும், கள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 75,000 மரம் ஏறும் தொழிலாளர்கள், தற்போது அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்றுவிட்டனர். பதனியில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையின் விலை ரூ. 200 ஆக உள்ளது. நீரா பானம் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்யும் போது ரூ. 500 வரை பெற முடியும் என்பதால் விவசாயிகள் பலன் பெறுவர். தமிழகம் முழுவதும் தற்போது விவசாயிகள் கள் இறக்கி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும் போலீசார், பானைகளை உடைப்பது, பொய் வழக்கு போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுவரை 30,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை சட்ட ரீதியாக சந்திப்போம்," எனக் கூறினார்.