தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட்

ஜம்மூ காஷ்மீர் : ஜம்மூ காஷ்மீரில் நடைபெற இருக்கும் தாசில்தார் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில், கழுதை படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மூ காஷ்மீர் : ஜம்மூ காஷ்மீரில் நடைபெற இருக்கும் தாசில்தார் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில், கழுதை படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, மாநில பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தாசில்தார்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நாளை (ஏப்.,29) நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

கச்சூர் கார் என்பவரது ஹால்டிக்கெட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக கழுதையின் படம் இடம்பெற்றிருந்த சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் அதனை, சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவைகளில் பகிர்ந்தார். காட்டுத்தீ போல பரவிய இப்பதிவு, சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அந்த ஹால்டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு புது ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மூ காஷ்மீர் பணியாளர் தேர்வாணைய ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரர் புகைப்படத்திற்கு பதிலாக விலங்கின் படம் இடம்பெறுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக, 2015ம் ஆண்டில் தேர்வு ஹால்டிக்கெட்டில் பசுவின் படம் இடம்பெற்றிருந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...