சாலை பாதுகாப்பு வாரம் : கோவையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கோவை : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கோவை : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த வாரவிழா வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, இன்று கோவையில் மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். 



வ.உ.சி பூங்கா வளாகத்தில் தொடங்கிய இந்த இரு சக்கர வாகன பேரணியானது. அவினாசி சாலை, லட்சுமி மில் வழியாக சென்று காந்திபுரம் வழியாக வந்து மீண்டும் வ.உ.சி பூங்கா வந்தது. பின்னர், நிறைவடைந்தது.

இந்த பேரணி குறித்து மாநகர காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் கூறுகையில், "‘சாலை விபத்துக்களைத் தடுக்க ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சாலை விபத்துகளினால் தனி நபர், குடும்பம், சமுதாயம் என பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே போகிறது. எனவே, வாகன ஓட்டிகள் தனி கவனத்துடன் சாலை விதிகளை கடைப்பிடித்து, விபத்து இல்லாத கோவை மாநகராக மாற்ற முன் வர வேண்டும்." என்றார். 



இந்த நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...