கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். காந்திபுரம், உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 48 கிலோ அடியுள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பழ மார்க்கெட்

இதே போல், உக்கடம் பழ மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உபயோகிக்க முடியாத நிலையில், விற்பனை செய்யப்பட இருந்த 2.5 டன் ஆரஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும், கலப்படம் செய்யப்பட்ட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவையில் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். காந்திபுரம், உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 48 கிலோ அடியுள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பழ மார்க்கெட்

இதே போல், உக்கடம் பழ மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உபயோகிக்க முடியாத நிலையில், விற்பனை செய்யப்பட இருந்த 2.5 டன் ஆரஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும், கலப்படம் செய்யப்பட்ட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவையில் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.