நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு : விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் மற்றும் பல்லடம் பகுதிகளுக்குட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக கோவை– கரூர் நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியைக் கண்டித்தும், காங்கேயம் மற்றும் பல்லடம் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இருக்கை அருகே எழுந்து வந்து முற்றுகையிட்டனர். 

இதனால், குறை தீர்க்கும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மனுவாக அளிக்க வலியுறுத்தியதை அடுத்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் நிலம் துண்டாடப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் இழப்பீடாக விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இருந்து 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...