நீலகிரி : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
நீலகிரி : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த வாரவிழா வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, உதகையில் கடந்த வார நாட்களில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகளில் வாகனத்தை இயக்குவது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று உதகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.
இதன் ஒரு பகுதியாக வாகனங்களை இயக்குவது குறித்தும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் வெள்ளை உடை அணிந்திருத்தல் வேண்டும், வாகனத்தை இயக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த வாரவிழா வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, உதகையில் கடந்த வார நாட்களில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகளில் வாகனத்தை இயக்குவது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று உதகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.
இதன் ஒரு பகுதியாக வாகனங்களை இயக்குவது குறித்தும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் வெள்ளை உடை அணிந்திருத்தல் வேண்டும், வாகனத்தை இயக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.