கோவை ரயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை நிறுத்த தனிவசதி

கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மத்திய ரயில்நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாற்றுத் திறனாளிகள் தனியாக வாகனங்கள் நிறுத்த வசதிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



தற்போதுள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஒருபுறம், அதாவது ரயில்நிலைய முன்புற வாசல் அருகே மட்டும் இடவசதி தரப்பட்டிருந்தது. தற்போது, நிறுத்துமிடத்தின் இருபுறங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் வரும் மாற்றுத்திறனாளிகள் அவற்றில் இருந்து இறங்கி எளிதாக ரயில்நிலையத்தின் உள் செல்ல வசதியாக, ரயில்நிலைய முன்புற வாசல் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், பணிகள் நிறைவுற்றவுடன், அதற்கான குறியீட்டுப்பலகைகள் அந்தந்த இடங்களில் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...