கோவை : கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிப்பது தொடர்பான புகார் கிடைத்ததும் அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு அபராதம் விதித்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை : கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிப்பது தொடர்பான புகார் கிடைத்ததும் அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு அபராதம் விதித்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது மாநகர போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 1 A (TN 42 M 5112) என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்றில், ஓட்டுநர் இருக்கையின் அருகில் உள்ள ஜன்னலில் அமர்ந்து அந்த பேருந்தின் ஊழியர் ஒருவர் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில், பயணம் செய்யும் அந்த ஊழியரால், இருந்தில் பயணிக்கும் மற்றவர்களின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறி ஏற்பட்டது.
இது தொடர்பாக, இன்று சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில், போக்குவரத்து காவலர்கள் அந்த தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
புகார் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.