காவிரி விவகாரத்திற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை: கோவையில் எச்.ராஜா பேட்டி

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடகா தேர்தலுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடகா தேர்தலுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேட்டில் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்திற்கு இன்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கோவையில் மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த தலைமை ஏற்கும் கட்சியாக எதிர்க்கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும், மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு இங்கு யாரும் போராடுவதில்லை. மத்திய அரசுக்கும், பக்கத்து மாநிலத்திற்கும், இலங்கைக்கும் எதிராகத் தான் இங்கு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதாக அவர்கள் சித்தரிக்கிறார்கள்.

தொடர்பு இல்லை

காவிரி விவாகரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்கும். நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டது போல 9 பேர் கொண்ட குழுவை சம்மந்தப்பட மாநிலங்கள் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அதில் கேரளாவும் கர்நாடகாவும் இன்னும் உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அவர்களை நியமிக்கும் வரை மேலும் இரண்டு வார கால அவகாசத்தை மத்திய அரசு கேட்டிருக்கலாம். அப்படியும் அவர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் நீதிமன்றமே நியமிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கும். அப்போது மத்திய அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் எந்த வித சமந்தமும் இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க தற்போது அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களா?.

குட்கா விவாகரத்தில் சி.பி.ஐ நேர்மையாக விசாரணை செய்யும். பத்திரிக்கையாளர் குறித்த எஸ்.வி.சேகரின் பதிவு தவறானது அவர் மீது சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அது பற்றி நீதிமன்றம் முடிவு எடுக்கும்." என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...