மேட்டுப்பாளையம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாறையின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாறையின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 18 பேர் நீலகிரி மாவட்டம் எம்ரால்டு பகுதியில் உள்ள ஒரு கோவில் விஷேச நிகழ்ச்சியில் இசை மேளம் வாசிக்க குழுவாக லாரியில் சென்றுள்ளனர். அத்திகடவு அருகே உள்ள சொரண்டி மேடு என்ற இடத்தில் லாரி சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், அந்த லாரியில் பயணித்த சுமார் 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 10 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் போலீசார், படுகாயமடைந்த பாலசுப்ரமணி, மகேஷ், நாகராஜ், சுரேஷ் உள்பட 8 பேரை மீட்டு ஆம்புலனஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...