சுற்றுலா வாகனங்களால் நீலகிரி மக்கள் பாதிப்படைவதை தடுக்க அனுமதி அட்டை அறிமுகம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சீசன் சமயங்களில் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று உதகையில் தொடங்கி வைத்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சீசன் சமயங்களில் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று உதகையில் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகை புரிவார்கள்.

அவ்வாறு தங்களது சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். இதனால் மாவட்டத்தில் சிறிய நகரங்களான உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் வாகனங்கள் குன்னூர் வழியாக ஒரு வழிப்பாதையாக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வாறு ஒரு வழிப்பாதையாக மாற்றும் நேரங்களில் உள்ளூர் மக்கள் உதகையில் இருந்து தங்களது கிராமப்புறங்களுக்கோ அல்லது நகரில் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கோ செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால், உள்ளூர் மக்கள் பாதிக்காத வகையில், உள்ளூர் வாகனங்களின் தகவல் அடிப்படையில் வாகன உரிமையாளர்களுக்கு வாகன அனுமதி அட்டை பெற உரிய உரிம படிவங்களுடன் அருகிலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யுமாறு மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.



இதன் அடிப்படையில் இன்று உதகையில் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை ஓட்டும் நிகழ்வை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.



அந்த அனுமதி அட்டை ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் சீசன் சமயங்களிலும் அவர்கள் செல்லும் பகுதிக்கு காவல் துறையினர் அனுமதி அளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...