சூறைக் காற்றால் சரிந்த மரம் : தகவல் கிடைத்த 90 நிமிடங்களில் அப்புறப்படுத்திய குழு

கோவை : கோவையில் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்த மரத்தினை 90 நிமிடங்களில் அகற்றிய மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவை : கோவையில் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்த மரத்தினை 90 நிமிடங்களில் அகற்றிய மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 06 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது, புயல் போல வீசிய சூறைக் காற்றினால், கட்டிடங்களின் மேற்கூறைகள் பறந்து சென்றன. மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் துகள்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இதனிடையே, வெங்கடசாமி சாலை, புது சித்தாபுதூர் பகுதியில் இருந்த பெரிய வேப்பம் மரம் ஒன்று இந்தக் காற்றுக்கு சரிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பெரும் சேதமடைந்தன. மேலும், மின்சார வயர்களின் மீது விழுந்ததால், தீப்பொறி கிளம்பியதுடன், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மீட்பு குழு, மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், சுமார், 90 நிமிடங்களில் உள்ளூர் மக்களின் உதவியுடன் சாலையில் கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், மின்சாரமும் சீர்செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.

தகவல் அறிந்த சில மணி நேரங்களிலேயே, எந்தவித உயிர்சேதமும் இல்லாமல் பணிகளை துரிதமாக செய்து முடித்த குழுவினருக்கு பொதுமக்கள் பாரட்டுக்களை கூறி வருகின்றனர். இதனிடையே, திறம்பட செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மலைசாமி, ரவிச்சந்திரன், பாபு, ஜீவா மற்றும் பாலமுருகன், மாநகாரட்சி ஜே.சி.பி. ஓட்டுநர் இளவரசன் ஆகியோரை கவுரவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...