திருப்பூரில் பழுதடைந்த சாலைகளுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்காத மாநகராட்சியைக் கண்டித்தும் குண்டும், குழியுமான சாலையில் மலர் வளையம் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்காத மாநகராட்சியைக் கண்டித்தும் குண்டும், குழியுமான சாலையில் மலர் வளையம் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தோட்டத்துப்பாளையம் பகுதியிலிருந்து நெருப்பெரிச்சல் பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. கனரக வாகனங்களினாலும், சாலை சரியாக செப்பனிடாததாலும் அந்தப் பகுதியிலான தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 



இந்த நிலையில், பழுதடைந்த சாலையை செப்பனிடாத மாநகராட்சியைக் கண்டித்தும், இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை உணர்த்தும் வகையில், குண்டும், குழியுமான சாலையில் மலர் வளையம் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...