சுந்தராபுரத்தில் கால்வாய் கட்டும் பணியில் தொய்வு: படாதபாடு படும் பொதுமக்கள்

கோவை: கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை: கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தெற்கு மண்டலம் வார்டு எண். 98-க்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள், இம்மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக, இருவழிப்பாதையாக இருந்த சாலை, ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகளுக்காக, கழிவுநீர் செல்லும் பாதை மண்ணைக் கொட்டி அடைக்கப்பட்டது. ஆனால், கடந்த இரு வாரங்களாக எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி வருகிறது.



மழை பெய்யும் நாட்களில் மழைநீர் கழிவுநீரோடு கலந்து பிரதான சாலையை நீர் குட்டையாக மாற்றிவிடுகின்றன. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீர் குட்டை அருகே மின்கம்பங்கள் இருப்பதால், மின்சார விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.



"சுமார் 20 நாட்களுக்கு முன் கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகளை தொடங்கினர், இன்றுவரை நிறைவடையவில்லை. கடை வாசலில் கழிநீர் தேங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் வர முடியவில்லை. இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் கடைகளை தற்காலிகமாக மூடிவிட்டனர். பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி, சுகாதர சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்த பின்னரும் பணிகள் துரிதப்படுத்தப்படவில்லை, என அவர் படும் இன்னல்களை தெரிவிக்கிறார் மளிகை கடை உரிமையாளர் முருகேசன்.



கடந்த இரு வாரங்களில் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. முறையான விபத்து எச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் வைக்கப்படாததால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கழிவுநீர் குட்டைக்குள் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.



பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சுந்தராபுரத்தை அடுத்துள்ள அண்ணா நகர் வழியாக வடிந்து மதுக்கரைக்கு செல்கிறது. இப்பகுதியில் கால்வாய் வடிகால் அமைக்கப்படும் போதே, ஆழமாக வடிகால்களை அமைத்திருந்தால், சீரமைப்புக்காக ஆகும் செலவுகளையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களையும் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.



கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேட்டிலிருந்து பொதுமக்களையும், விபத்துகளிலிருந்து வாகன ஓட்டிகளையும் மாநகராட்சி நிர்வாகத்தினர் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...